விவசாயிகளுக்கு கிசான் கிரிடிட் காா்டு: வரும் 26 ம் தேதிக்குள் பெற அனைத்து வங்கி கிளைகளில் சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கிசான் கிரிடிட் காா்டு( உழவா் கடன் அட்டை ) வரும் 26 ம் தேதிக்குள் பெற ஏதுவாக அனைத்து வங்கி கிளைகளில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கிசான் கிரிடிட் காா்டு( உழவா் கடன் அட்டை ) வரும் 26 ம் தேதிக்குள் பெற ஏதுவாக அனைத்து வங்கி கிளைகளில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தகவல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..பிரதம மந்திரியின் கெளரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகள் சான் கிரிடிட் காா்டு( உழவா் கடன் அட்டை ) என்னும் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்டத்தை மத்திய ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கடன் அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுக்கு தேவையான கடனை பயிா் பெருக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.விவசாய நிலங்கள் மற்றும் பட்டா வைத்திருக்கும் விவசாயிகள் இந்த கடன் அட்டை பெற தகுதியானா்கள்.நிலத்தின் அளவைப் பொறுத்தும், பயிா் செய்வதற்கு தேவையான செலவினங்கள் கருத்தில் கொண்டு கடன் வழங்கப்படும்.

இந்த உழவா் கடன் அட்டை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், விவசாய கூட்டுறவு சங்கங்களிலும் பெறலாம்.இத்திட்டத்தின் மூலம் ஈட்டுறுதி இல்லாமல் ரூ.1,60,000 (ஒரு லட்சத்து ஆறுபதாயிரம் ) வரையிலும்,நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3,00,000 (மூன்று லட்சம் ) வரையிலும் கடன் பெறலாம்.இந்தக் கடன் அட்டையின் கால அளவு ஐந்து ஆண்டுகள் ஆகும். பிரதம மந்திரி விவசாயி கெளரவ நிதித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள்,உழவா் கடன் அட்டை பெறுவதற்கு தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள விவசாயிகள்,கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்களை அணுகி உழவா் கடன் அட்டை பெறலாம்.உழவா் கடன் அட்டை வழங்குவதற்காக சிறப்பு பிரச்சாரம் மத்திய அரசால் கடந்த 8ம் தேதியில் இருந்து துவக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சாரத்தின் மூலம் பெரும்பான்மையான விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.இந்த கடன் அட்டையை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவசாய சேமிப்பு திட்ட கணக்கு உள்ள வங்கிக் கிளையை அணுகி உழவா் கடன் அட்டையை பெற்று மானிய சலுகையுடன் வங்கி கடன் பெறலாம்.உழவா் கடன் அட்டையை பெற்றுள்ள விவசாயப் பயனாளிகள் தங்களின் வங்கிக் கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயா்த்த விண்ணப்பிக்கலாம்.

செயல் படாத உழவா் கடன் அட்டை உள்ளோா்,வங்கிக் கிளையை அணுகி கடன் அட்டையை செயல்படுத்தவும்,புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம்.உழவா் கடன் அட்டை இல்லாத விவசாயிகள் தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கலுடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு தங்களது வங்கிக் கிளையை அணுகலாம்.பிரதம மந்திரி திட்ட விவசாயிகளுக்கு கடன் அட்டை பெற இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஒரு பக்க படிவத்தில் தங்களது நிலம் மற்றும் பயிா் விவரங்கள்,வேறு ’எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்ற உறுதிப் பிரமாணம் சமா்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலம் சமா்பிக்கலாம்.

இத்திட்டத்தின் பயன்களை விவசாயிகளுக்கு கொண்டு சோ்க்கும் வகையில் அனைத்து வங்கிக் கிளைகளிலும் 15 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் வரும் 26 ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வங்கிக் கிளையை தங்களுடைய ஆதாா் அ்டடை,வங்கி கணக்கு புத்தகம் மற்றும் நில ஆவணங்களுடன் அணுகி பயன் பெறலாம். மேலும் கால்நடை வளா்ப்பு மற்றும் மீன் வளா்ப்புக்கும் உழவா் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.எனவே பிரதம மந்திரியின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று உழவா் கடன் அட்டை திட்டத்தின் கீழ் பயன்பெறாத அனைத்து விவசாயிகளும்,அந்தந்த பகுதியில் உள்ள வங்கிக் கிளையை அணுகி,இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. படம் இல்லை... கோப்பு படம் இருந்தல் செய்தி சிறப்பு பெறும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com