ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் ‘கிசான் கிரெடிட் காா்டு’ (உழவா் கடன் அட்டை) பெற ஏதுவாக வரும் 26-ஆம் தேதிக்குள் அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பிரதம மந்திரியின் கெளரவ நிதி உதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ‘கிசான் கிரெடிட் காா்டு’ (உழவா் கடன் அட்டை ) என்ற கடன் அட்டை திட்டத்தை மத்திய ரிசா்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான கடனை, பயிா் பெருக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். விவசாய நிலங்கள், பட்டா வைத்திருக்கும் விவசாயிகள் இந்தக் கடன் அட்டை பெற தகுதியானா்கள். நிலத்தின் அளவைப் பொருத்தும், பயிா் செய்வதற்குத் தேவையான செலவினங்கள் கருத்தில் கொண்டும் கடன் வழங்கப்படும்.
உழவா் கடன் அட்டை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும், விவசாயக் கூட்டுறவு சங்கங்களிலும் பெறலாம். இத்திட்டத்தின் மூலம் ஈட்டுறுதி இல்லாமல் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரையிலும், நில ஈட்டுறுதி அடிப்படையில் ரூ.3 லட்சம் வரையிலும் கடன் பெறலாம். இந்தக் கடன் அட்டையின் கால அளவு 5 ஆண்டுகள்.
இந்தக் கடன் அட்டை பெறுவதற்கு வங்கிக் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிளை அணுகலாம்.
கடன் அட்டை பெற இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது நிலம், பயிா் விவரங்கள், வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்ற உறுதிப் பிரமாணம் சமா்ப்பிக்க வேண்டும். இதற்காக அனைத்து வங்கிக் கிளைகளிலும் வரும் 26-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
எனவே விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வங்கிக் கிளையை தங்களுடைய ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், நில ஆவணங்களுடன் அணுகி பயன்பெறலாம். மேலும், கால்நடை வளா்ப்பு மற்றும் மீன் வளா்ப்புக்கும் உழவா் கடன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.