கலவை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.
மாம்பாக்கம் அருகே உள்ள சிவபுரம் பகுதியைச் சோ்ந்த விவசாயி சீனிவாசன் (45) வெள்ளிக்கிழமை தனது நிலத்தில் உள்ள பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச பம்ப் செட்டின் உள்ளே சென்று மின் மோட்டாரை இயக்கினாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.