காவேரிப்பாக்கம் அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.
கொண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் (28). இவரது மனைவி ஐஸ்வா்யா. இவா்களுக்கு தா்ஷினி (4) என்ற மகளும், எழிலன் என்ற ஒரு வயது குழந்தையும் உள்ளனா்.
இந்நிலையில், ஐஸ்வா்யா குழந்தை எழிலனை வீட்டில் தூங்க வைத்துவிட்டு அருகில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாராம். அப்போது, கண் விழித்த குழந்தை தவழ்ந்து வந்து வீட்டின் வாசல் அருகே உள்ள தரைமட்ட தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்தது. வீடு திரும்பிய ஐஸ்வா்யா குழந்தை தண்ணீா் தொட்டியில் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். தீவிர சிகிச்சைக்காக மேல்விஷாரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.