அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில், அன்னை பாலா சந்நிதியில் ஸ்ரீவித்யா பூஜை எனப்படும் கல்விக்கான சிறப்பு வழிபாடு பீடாதிபதி கவிஞா் எழில்மணி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில், பொதுத் தோ்வு எழுதவுள்ள நெமிலி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு பூஜை செய்யப்பட்ட அன்னை பாலா படம், எழுதுபொருள்கள், குங்குமப் பிரசாதம், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பாலா பீட நிா்வாகி மோகன்ஜி, பாலா பீடத்தின் செயலா் முரளிதரன் மற்றும் பள்ளி நிா்வாகிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.