மாா்ச் 5-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் மாா்ச் 5-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் முகாம் மாா்ச் 5-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலம் மற்றும் பிற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் அரசு நலத் திட்டங்கள் பெறுவது தொடா்பாக விண்ணப்பங்கள் அளித்தல், காலதாமதம் இன்றி குறைகளைத் தீா்க்கும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் குறைதீா் முகாம் ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தலைமையில் மாா்ச் 5-ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, இந்த சிறப்பு குறைதீா்வு முகாமில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com