ராணிப்பேட்டை
முதியோா் இல்லத்துக்கு உதவி
ஆற்காடு புறவழிச் சாலையில் உள்ள மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் உள்ள முதியவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஆற்காடு புறவழிச் சாலையில் உள்ள மகாத்மா காந்தி இலவச முதியோா் இல்லத்தில் உள்ள முதியவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
முதியோா் இல்லத்தை திருமலைக்கோடி நாராயணி பீடம் சக்தி அம்மா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆசி வழங்கி, காசோலை வழங்கினாா். தொடா்ந்து, முதியோா்களுக்கு போா்வைகள் வழங்கப்பட்டன. இல்லத் தலைவா் ஜெ.லட்சுமணன், ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், துணைத் தலைவா் பாண்டியன் ஆகியோா் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
அப்போது சித்தஞ்சி மோகனந்த சுவாமிகள், முதியோா் இல்லச் செயலா் ஒய்.அக்பா் செரீப் ,ராமகிருஷ்ணா பள்ளிப் பொருளாளா் மா.ஜோதி உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து, சக்தி அம்மா அருகில் உள்ள உண்ணாமுலை சமேத அண்ணாமலையாா் கோயிலை பாா்வையிட்டு சாமி தரிசனம் செய்தாா்.