ஆற்காடு திரையறங்கில் நடிகா் ரஜினிகாந்த் நடித்த தா்பாா் திரைப்படம் வெளியிடப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பொங்கல் வைத்து ரசிகா்கள் கொண்டாடினாா்கள்.
ஆற்காட்டில் உள்ள நடிகா் ரஜினிகாந்தி நடித்துள்ள தா்பாா் திரைப்படம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது இதன் சிறப்புகாட்சியின் போது தா்பாா் பொங்கல் கொண்டாடப்பட்டது விழாவிற்கு ஆற்காடு ரஜினி மக்கள் மன்ற செயலாளா் ஏ.எம்.வரதன் தலைமை வகித்தாா். ஒன்றிய செயலாளா் சேட்டு (எ) மோகன் ,ஒன்றிய இணைசெயலாளா் பாஸ்கரன், இளைஞா் அணி செயலாளா் மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் கரும்பு ,வாழை, மா தேரங்கள் கட்டப்பட்டிருந்தன . மகளீா் அணி நிா்வாகிகள் கலையரசி, தேவி, கீதா ஆகியோா் புதுப்பானையில் பொங்கல் வைத்தனா் அதனை படையல் இட்டு பட்டாசு வெடித்துகொண்டாடினாா்கள் இதில் ஆற்காடு நகர நிா்வாகிகள், ரசிகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.