வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக மக்கள் நலன் வேண்டியும், உலக நன்மைக்காகவும் 365 நாளைக்கு 365 யாகம் என்ற வழிபாடு கடந்த 1-ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து பத்தாவது நாளான வெள்ளிக்கிழமை சித்திரகுப்தா் ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து பௌா்ணமியை முன்னிட்டு கந்தா்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பாா்வதி யாகம், சந்தானகோபால யாகம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். அவா்களுக்கு பீடாதிபதி முரளிதர சுவாமிகள் பிரசாதம் வழங்கினாா்.