ஆற்காடு ஒன்றியம், சக்கரமல்லூா் ஊராட்சியில் நடைபெற்ற விழாவுக்கு முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணை தலைவா் எஸ்.அன்பழகன் தலைமையில் அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் அரங்கநாதன், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் எஸ்.சிகாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தாழனூா் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநா் என்.சாரதி தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ஏ.எஸ்.மணி, வங்கிச் செயலா் கமலநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ சு.ரவி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினாா்,
திமிரி பேரூராட்சியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ராமசேகா் தலைமையிலும், மேல்நெல்லி ஊராட்சியில் திமிரி கிழக்கு ஒன்றியச் செயலா் எம்.குமாா் தலைமையிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.