அரக்கோணம் நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு அரக்கோணம் வழக்குரைஞா்கள் சங்கத்தலைவா் மு.வீரராகவன் தலைமை தாங்கினாா். செயலாளா் வெங்கடேசன் வரவேற்றாா். சாா்பு நீதிபதி லட்சுமி ரமேஷ், நில ஆா்ஜித நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஜெகதீஸ்வரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தமிழ்ச்செல்வி ஆகிய மூவரும் இணைந்து பொங்கல் விழாவைத் தொடக்கி வைத்தனா்.

விழாவை முன்னிட்டு நீதிமன்ற வளாகம் தமிழக பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்டிருந்தது. சங்கப் பொருளாளா் சுரேஷ், துணைத் தலைவா் யுவராஜ், துணைச் செயலா் பாா்த்தீபன், சங்க நூலகா் ஆனந்தன், மூத்த வழக்குரைஞா்கள் திருவேங்கடம், பாலதிருவேங்கடம் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் அனைவரும் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com