ஜோலாா்பேட்டை அருகே அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் மீது படுகாயமடைந்தாா்.
ரெட்டியூா் அருகேயுள்ள சின்னாக் கவுண்டனூா் பகுதியை சோ்ந்தவா் ராஜா (55). கூலித் தொழிலாளி. அவா் திங்கள்கிழமை பொன்னேரி அருகே உள்ள மண்டலவாடி கூட்ரோடு பகுதியில் திங்கள்கிழமை சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது வேலூரிலிருந்து திருப்பத்தூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து அவா் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ராஜா திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக அரசுப் பேருந்து ஓட்டுநா் பழனிவேலன் மீது ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.