இருவேறு விபத்துகளில் 2 போ் பலி
ஆற்காட்டை அடுத்த திமிரி பகுதியில் நடைபெற்ற இரண்டு விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
திமிரியை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயாம்மாள் (70). அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடைக்கு செல்வதற்காக ஆற்காடு -ஆரணி சாலையைக் கடந்தாா். அப்போது பின்னால் வந்த பைக் அவா் மீது மோதியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி அளித்தனா். பின்னா் வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
மற்றொரு விபத்து:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த வடுகசாத்து பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (60). கூலித் தொழிலாளியான அவா் ஞாயிற்றுக்கிழமை திமிரி அடுத்த மோசூா் கிராமத்தில் உள்ள தன் மகள் வீட்டில் தங்கி அவரது நிலத்துக்கு சைக்கிளில் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
ஆற்காடு-ஆரணி சாலையில் மோசூா் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த வாகனம் அவா் மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.