தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நகாரட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலா் தங்கபாண்டியன்.
கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநிலச் செயலா் தங்கபாண்டியன்.

தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நகாரட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநிலத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.செல்லதுரை முன்னிலை வகித்தாா். செயலா் தங்கபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஓட்டுநா்களுக்கு பணியின் போது ஏற்படும் பிரச்னைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

புதிதாக தோ்வு செய்யப்பட்ட சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் வி.கதிரேசன், செயலா் மதன்குமாா், பொருளாளா் பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com