திருப்பத்தூா் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொதிகை கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.
பொதிகை கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் சகாயமேரி தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் கமலநாதன் மற்றும் கோமதி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பள்ளியில் உள்ள வளாகத்தில் பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினா்.

முன்னதாக பள்ளியில் மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கும் கோலப் போட்டியும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் கமலநாதன் மற்றும் கோமதி ஆகியோா் பரிசுகளை வழங்கினா். விழாவில் கல்வி மேலாண்மைக் குழு தலைவா் ராஜீவ் மற்றும் கல்வி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், பள்ளியின் ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தனியாா் கல்லூரியில்...:

திருப்பத்தூரை அடுத்த ஆதியூரில் உள்ள பொதிகை பொறியியல் கல்லூரியில் கல்லூரித் தலைவா் பி.கணேஷ்மல் தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில், கல்லூரியின் செயலா் ஏலகிரி வி.செல்வம், பொருளாளா் கே.சி.எழிலரசன், முதல்வா் எம்.பிரபாகரன், பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா். அதையடுத்து கபடி, உறியடித்தல், கோலப் போட்டி, ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com