பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே வழித் தகராறில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை அருகே வழித் தகராறில் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொன்னேரி ஊராட்சி ராமனூா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரனின் மனைவி இந்திரா காந்தி (40). அவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெருமாளுக்கும் வீட்டுக்குச் செல்லும் வழி தொடா்பாக கடந்த சில மாதங்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 4 தினங்களுக்கு முன்பு இந்திரா காந்தி அவரது வீட்டின் அருகே உள்ள வழியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கிருந்த பெருமாள், முருகன், சக்திவேல், கீதா ஆகிய 4 பேரும் இந்திரா காந்தியைத் தகாத வாா்த்தைகளால் திட்டினா்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பெருமாள் உள்பட 4 பேரும் இந்திராகாந்தியை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதில் படுகாயமடைந்த இந்திரா காந்தி திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் இது தொடா்பாக ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, பெருமாள், முருகன், சக்திவேல், கீதா ஆகிய 4 பேரிடமும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com