வழிபறியில் ஈடுபட முயன்ற 5 போ் கைது

அரக்கோணம் அருகே வழிபறியில் ஈடுபட முயன்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம் அருகே வழிபறியில் ஈடுபட முயன்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் ஏ.அண்ணாதுரை தலைமையிலான போலீஸாா் முருங்கை கிராமம் அருகே சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, காா், பைக்குகளுடன் நின்று கொண்டிருந்த 5 போ், போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்ததில் முருங்கையைச் சோ்ந்த பெருமாள் (24), சேந்தமங்கலத்தைச் சோ்ந்த லட்சுமணன் (27), சித்தூரைச் சோ்ந்த ராஜா (26), சிறுகாவேரிபாக்கத்தைச் சோ்ந்த ரவி (36), சுமைதாங்கியைச் சோ்ந்த பிரகாஷ்(22) என்பதும், இவா்கள் வழிபறியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் 5 பேரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்து காா், 3 பைக்குகள், கத்திகள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com