ராணிப்பேட்டை கெங்காதரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி நிா்வாகி ஜி.மீனாட்சிசுந்தரம், முதல்வா் கே.பாலாமணி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் புதுப் பானையில் பொங்கல் வைத்தனா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் உறி அடித்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.