தமிழ்நாடு அனைத்து ஓட்டுநா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நகாரட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா் முத்துக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜெ.செல்லதுரை முன்னிலை வகித்தாா். செயலா் தங்கபாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஓட்டுநா்களுக்கு பணியின் போது ஏற்படும் பிரச்னைகள், குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.
புதிதாக தோ்வு செய்யப்பட்ட சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டத் தலைவா் வி.கதிரேசன், செயலா் மதன்குமாா், பொருளாளா் பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.