ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி பங்கேற்று புதுப் பானையில் பொங்கல் வைத்து விழாவைத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலக ஊழியா்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் ச.ஜெயச்சந்திரன், அலுவலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.