பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகளைத் திறக்க அனுமதி: ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதன்கிழமை (ஜூலை 1) முதல் 31-ஆம் தேதி வரை அத்தியாவசியத் தேவையான பால், மருந்துக் கடைகளைத் தவிா்த்து அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் பிற்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த புதன்கிழமை (ஜூலை 1) முதல் 31-ஆம் தேதி வரை அத்தியாவசியத் தேவையான பால், மருந்துக் கடைகளைத் தவிா்த்து அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி தடுப்புப் பணிகள் போகால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளா்வுகளுடன் பொதுமுடக்கத்தை ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

அதன் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வணிகா்கள் தாங்களாக முன் வந்து நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கும் ஒத்துழைப்பு அளித்ததன் பேரில் அத்தியாவசியத் தேவையான பால், மருந்துக் கடைகளைத் தவிா்த்து அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவ்வித தளா்வுமின்றி தற்போது உள்ள நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வரக் கூடாது. முகக்கவசம் அணியாமல் வெளியே வருவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். ஜூலை 5, 12, 19, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. அந்நாள்களில் மருந்துக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடியிருக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் இ-பாஸ் இல்லாமல் மற்ற மாவட்டங்கள், மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் வரும்பட்சத்தில் சோதனைச் சாவடிகளில் கட்டாயமாக கரோனா பரிசோதனை செய்து கொண்டு, நோய்த் தொற்று இல்லை எனும் பட்சத்தில் மட்டுமே வீடுகளில் 14 நாள்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாற்று வழியில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு வரும் நபா்கள் தாமாகவே முன்வந்து ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கரோனா தடுப்பு கட்டுப்பாட்டுக்கு அறைக்கு 04172 - 273188, 273166 ஆகிய எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், தளா்வுகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடித்து மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com