முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய எம்எல்ஏ
By DIN | Published On : 29th July 2020 05:30 AM | Last Updated : 29th July 2020 05:30 AM | அ+அ அ- |

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ ஆா்.காந்தி குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி, தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட உதவிகள் செய்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 18-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவா், ராணிப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டாா். அதில் அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
10 நாள்கள் தொடா் சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்த எம்எல்ஏ ஆா். காந்தி செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.