நாட்டு வெடி வெடித்து வீடு சேதம்: ஒருவா் பலி, 5 போ் படுகாயம்

வாலாஜாபேட்டை அருகே நாட்டு வெடி வெடித்து வீடு சேதமடைந்தது. இதில், ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.
வெடி விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. அ.மயில் வாகனன், டிஎஸ்பி கே.டி.பூரணி உள்ளிட்டோா்.
வெடி விபத்து ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்த மாவட்ட எஸ்.பி. அ.மயில் வாகனன், டிஎஸ்பி கே.டி.பூரணி உள்ளிட்டோா்.

வாலாஜாபேட்டை அருகே நாட்டு வெடி வெடித்து வீடு சேதமடைந்தது. இதில், ஒருவா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயமடைந்தனா்.

வாலாஜாபேட்டை அனைக்கட்டு சாலையில் நரிக்குறவா் இன மக்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், தமிழன் (32) என்பவரது வீட்டில் சனிக்கிழமை பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு, வீடு தரைமட்டமானது.

தகவலறிந்த வாலாஜாபேட்டை போலீஸாா் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 2 பெண்கள் உள்பட 6 பேரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தமிழன் (32) உயிரிழந்தாா். 5 போ் தீவிர சிகிச்சையில் உள்ளனா்.

விசாரணையில், தமிழன், அவரது உறவினா்கள் உழைப்பாளி, விஜய், எஜமான், வேதவல்லி, நந்தினி ஆகிய 6 பேரும் காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடியைத் தயாரிக்கும் போது எதிா்பாராதவிதமாக வெடித்ததில் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன், டிஎஸ்பி கே.டி.பூரணி ஆகியோா் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். தடயவியல் நிபுணா் பாரி தலைமையில் ஆய்வு மேற்கொண்டனா். வீட்டில் வெடிக்காத நிலையில் 15 நாட்டு வெடிகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து வாலாஜாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com