முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
சுடுகாட்டில் மரத்தில் தொங்கிய மாணவா் சடலம் மீட்பு
By DIN | Published On : 03rd March 2020 12:20 AM | Last Updated : 03rd March 2020 12:20 AM | அ+அ அ- |

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே 9-ஆம் வகுப்பு மாணவரின் சடலம் சுடுகாட்டு மரத்தில் தொங்கியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அம்மூா் அருகே உள்ள பைராகி காலனி பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். அவருடைய மகன் தங்கராசு (14), அம்மூா் அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இரு தினங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்ற தங்கராசு அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், பள்ளி காலனி அருகே சுடுகாடு பகுதியில் உள்ள மரத்தில் தங்கராசுவின் சடலம் தொங்கிய நிலையில் இருப்பதாக ராணிப்பேட்டை பேலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா், மாணவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.