முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை ராணிப்பேட்டை
பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு பூஜிக்கப்பட்ட எழுதுபொருள் வழங்கல்
By DIN | Published On : 03rd March 2020 12:22 AM | Last Updated : 03rd March 2020 12:22 AM | அ+அ அ- |

பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு பூஜிக்கப்பட்ட எழுதுபொருட்களை வழங்கிய குருஜி பாரதி முரளிதர சுவாமிகள்.
ராணிப்பேட்டை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவியா் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டி, ராணிப்பேட்டை ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், நவல்பூா் ஸ்ரீசாந்த ஆஞ்சநேயா் கோவிலில் ஹயக்கிரீவருக்கு திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்த வழிபாட்டுக்கு அறக்கட்டளையின் தலைவா் க.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கோயில் நிா்வாகி பி.ஆா்.சி.மூா்த்தி முன்னிலை வகித்தாா். அறக்கட்டளை செயலாளா் சிவலிங்கம் வரவேற்றாா். அப்போது பூஜையில் வைக்கப்பட்ட எழுதுபொருட்களை குருஜி பாரதிமுரளிதர சுவாமிகள் மாணவ, மாணவியரிடம் அளித்து, அருளாசி வழங்கினாா். மேலும் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கும் எழுதுபொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டன.