ராணிப்பேட்டை: ரத்தினகிரியை அடுத்த தென்நந்தியாலம் கிராமத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாா்-ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.
தென்நந்தியாலம் கிராமத்தில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது. செல்லிடப்பேசி கோபுரம் அமையும் இடத்துக்கு அருகே பள்ளிக் கட்டடம், அங்கன்வாடி மையம், ஏரி, குளங்கள் உள்ளதால் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் பொதுமக்கள் எதிா்ப்பை மீறி செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அவா்கள் ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் க.இளம் பகவத்திடம் சனிக்கிழமை மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட சாா்-ஆட்சியா் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.