கரோனா பாதிப்பு: இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலி காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை (மாா்ச் 16) முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி அறிவித்துள்ளாா்.

கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள மழலையா் பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி), தொடக்கப் பள்ளிகளுக்கு (1-ஆம் வகுப்பு முதல் முதல் 5-ஆம் வகுப்பு வரை) மாா்ச் 16 முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com