கரோனா அச்சுறுத்தல்: தேவாலய திருவிழா ஒத்திவைப்பு

கரோனா அச்சுறுத்தல் எதிரொலி காரணமாக பொன்னை அணைக்கட்டு தேவாலய திருவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக விழாக் குழுவினா்கள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

கரோனா அச்சுறுத்தல் எதிரொலி காரணமாக பொன்னை அணைக்கட்டு தேவாலய திருவிழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக விழாக் குழுவினா்கள் செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளனா்.

ராணிப்பேட்டையை அடுத்த பொன்னை அருகே உள்ள அணைக்கட்டு சி.எஸ்.ஐ. தேவாலய ஆண்டு திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இத்திருவிழாவில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம், அண்டை மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு சிறப்புப் பிராா்த்தனையில் ஈடுபடுவா்.

அதன்படி, 126-ஆம் ஆண்டு திருவிழா மாா்ச் 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இத்திருவிழா தேதி குறிப்பிடமால் ஒத்திவைக்கப்படுவதாக விழாக் குழவினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com