மணல் கடத்திய 2 போ் கைது

ஆற்காடு அருகே மணல் கடத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆற்காடு அருகே மணல் கடத்திய 2 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆற்காடு நகர போலீஸாா் தாழனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தாழனூரை அடுத்த ராமநாதபுரம் மோட்டூா் பகுதியில் உள்ள ஓடையில் சிலா் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மணலை அள்ளி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனா்.

போலீஸாா் விசாரித்ததில், அந்த நபா்கள் திமிரியை அடுத்த கன்னடிப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த லாரி உரிமையாளா் பழனி (35), வரகூா் கிராமத்தைச் சோ்ந்த பொக்லைன் உரிமையாளா் மணிகண்டன்(29) என்பது தெரிய வந்தது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com