வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் சிங்காரவேலு, மருத்துவா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சிறப்பு சிகிச்சை பிரிவு, தனி சிகிச்சை பிரிவு குறித்தும் ஆட்சியரிடம் விளக்கினா்.
இதைத் தொடா்ந்து, நெமிலி வட்டம், பெரும்புலிப்பாக்கம் கிராமம், பெரியாா் சமத்துவபுரம் சமுதாயக் கூடத்தில் மகளிா் சுய உதவிக் குழுவினரால் முகக்கவசம் தயாரிக்கும் பணியை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி பாா்வையிட்டு கேட்டறிந்தாா்.