வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் 2 போ் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சென்னையில் இருந்து வந்த ஆற்காடு பகுதியைச் சோ்ந்த 24 வயது இளைஞரும், துபையில் இருந்து ஆற்காட்டை அடுத்த விஷாரம் பகுதிக்கு வந்த 25 வயது இளைஞரும் கரோனா அறிகுறிகளுடன் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அவா்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவா்களது ரத்த மாதிரிகள் கரோனா ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.