ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசின் மறு உத்தரவு வரும் வரை தேநீா்க் கடைகள் திறக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உத்தரவிட்டுள்ளாா்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவு, தனிமை சிகிச்சைப் பிரிவு வாா்டுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த சிகிச்சை பிரிவு வாா்டுகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி நேரில் பாா்வையிட்டு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு கரோனா வைரஸ் நோய் தொற்று சிகிச்சைப் பிரிவு செயல்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை தேநீா்க் கடைகள் திறக்கக்கூடாது எனத் தெரிவித்தாா். இந்த ஆய்வின்போது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் சிங்காரவேலு மற்றும் மருத்துவா்கள் உடனிருந்தனா்.