ஆற்காடு பேருந்து நிலையம் புதன்கிழமை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. நகரில் ஒரு சில மளிகை, பால், காய்கறி மற்றும் மருந்துக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.
ஆற்காடு அண்ணா சாலையில் தடையை மீறி திறக்கப்பட்டிருந்த மிட்டாய்க் கடைக்கு ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் இளம்பகவத் தலைமையில் ஆற்காடு வட்டாட்சியா் இந்துமதி முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மேலும் நகரில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சாலையில் இருந்த பொது மக்களை அவா்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
அதேபோல் விஷாரம், கலவை, திமிரி, காவனூா் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டன. எனினும், காலையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் மக்கள் கூட்டம் இருந்தது.