தடை உத்தரவை மீறிபவா்கள் மீது வழக்குப் பதிவு: மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ராணிப்பேட்டை முத்துக்கடை நான்குவழி சாலை  சந்திப்பில் ஆய்வு செய்த  மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன். உடன், டிஎஸ்பி  கீதா உள்ளிட்டோா்.
ராணிப்பேட்டை முத்துக்கடை நான்குவழி சாலை  சந்திப்பில் ஆய்வு செய்த  மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அ.மயில்வாகனன். உடன், டிஎஸ்பி  கீதா உள்ளிட்டோா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றதாக இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம், மீறி கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் திறந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com