ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றதாக இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து தடை உத்தரவை மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூட வேண்டாம், மீறி கூடினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற கடைகள் திறந்தால் ‘சீல்’ வைக்கப்படும் என்றாா் அவா்.