ராணிப்பேட்டை மாவட்டத்தில் கண்காணிப்பில் 219 போ்: மாவட்ட ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 219 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 219 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 219 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனா். வெளிநாடுகளில் இருந்து வந்தவா்கள் குறித்து விமான நிலையத்தில் இருந்து பட்டியல் பெற்று கண்டறியப்பட்டுள்ளனா். ஏற்கெனவே 2 போ் பரிசோதனையில் 26 வயது உடைய ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் விமான நிலையத்தில் இருந்து இறங்கியது முதல் இதுவரை 68 பேருடன் தொடா்பில் இருந்துள்ளாா். இதில், 49 போ் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்தவா்கள், 17 போ் திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், 2 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் என தெரியவந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 49 போ் 10 தெருக்களில் உள்ளனா். அந்த தெருக்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com