ஊரடங்கால் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ள ஆற்காடு மேற்கு ஒன்றியம் ஆயிலம், தாழனூா், கத்தியவாடி, ரத்தினகிரி, பூட்டுத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 83 ஆட்டோ ஓட்டுநா்கள் குடும்பத்தினருக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிப் பொருள்களை எம்எல்ஏ ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
ஆற்காடு மேற்கு ஒன்றியச் செயலா் ஏ.வி.நந்தகுமாா், துணைச் செயலா் எஸ்.தண்டாயுதபாணி, மாவட்ட பிரிதிநிதி பிரசாத், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் எஸ்.வினோத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.