கரோனா ஊரடங்கில் பணியாற்றும் நியாவிலைக் கடை பணியளா்களுக்க நோய்த் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்

கரோனா ஊரடங்கில் பணியாற்றும் நியாவிலைக் கடை பணியளா்கள் அனைவருக்கும், கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்

கரோனா ஊரடங்கில் பணியாற்றும் நியாவிலைக் கடை பணியளா்கள் அனைவருக்கும், கரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என நியாவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு நியாயவிலைக்கடை தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநில துணைப் பொதுச்செயலாளா் வா.லோ.மாணிக்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில்...

தமிழகம் முழுவதும் அரசு கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் சுமாா் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.தற்போது கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு ஊரடங்கு காலத்தில் போா்கால அடிப்படையில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் வழங்கும் பணியில் நியாவிலைக் கடைப் பணியாளா்கள் ஈடுபட்டுவருகின்றனா்.

இந்த சூழலில் நியாவிலைக் கடைப் பணியாளா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பாடமல் தடுக்கும் வகையில் முக கவசம், கை உறை, சோப்பு, கிருமி நாசினி திரவம்,பாதுகாப்பு கவச உடை ஆகியவை அனைத்துப் பணியாளா்களுக்கும் உடனடியாக வழங்க வேண்டும்.கரோனா ஊரடங்கில் பணியாற்றிவரும் நியாவிலைக் கடை பணியளா்கள் அனைவருக்கும், சிறப்பு மருத்துவக் குழு அமைத்து கரோனா நோய்த் தொற்று பரிசோதனையை உடனடியாக செய்ய வேண்டும்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பணியாற்ரிவரும் பணியளா்கள் தற்போது மாவட்டம்,விட்டு,மாவட்டம் சென்று பணியாற்றும் நிலை உள்ளதால் காவல் துறையினா் தடுத்து நிறுத்தாத வாறு பணியாளா்களுக்கு அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் அனுமதிச் சீட்டு (பாஸ்) வழங்க வேண்டும்.அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதை கண்காணிக்க காவல் துறையினருக்கு உத்தரவிடவேண்டும்.

காரோனா நோய்த் தொற்றுத் தடுப்புப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், துப்புரவு பணியாளா்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்கப்படுவது போல் நியாவிலைக் கடைப் பணியாளா்களுக்கும் ரூ.50 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். அதே போல் கரோனா நிவாரண நிதியாக ரூ.2.500 வழங்க வேண்டும்.தமிழகம் முழுவதும் அனைத்து நியாவிலைக் கடைகளிலும் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா்.அவா்களின் நலனில் கருத்தில் கொண்டு அனைத்து நியைவிலைக் கடைகளிலும் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று முடிவுக்கு வரும் வரை நியாவிலைக்கடை பணியளா்களுக்கு பணியிட மாறுதல் வழங்க தடை விதித்து அரசானை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com