ராணிப்பேட்டை மாவட்டத்தில் தங்கியிருந்த 13 போ் ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஆந்திர மாநிலம் கடப்பா, கா்னூல் பகுதிகளைச் சோ்ந்த 13 போ் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, நெமிலி பகுதிகளில் தங்கி கூலி வேலை செய்து வந்தனா் இவா்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதி கேட்டதை அடுத்து, ஆற்காடு வட்டாட்சியா் இளஞ்செழியன் வேன் மூலம் 5 பெண்கள் உள்பட 13 பேரை வியாழக்கிழமை அனுப்பி வைத்தாா்.