இரண்டு பைக்குகள் தீ வைத்து எரிப்பு

மேல்விஷாரத்தில் வியாபாரி வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

மேல்விஷாரத்தில் வியாபாரி வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு பைக்குகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் கையூம் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரியாஸ் அஹமத் (48). வியாபாரியான அவருக்கு சொந்தமான 2 பைக்குகளை தன் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தாா்.

இந்நிலையில், அந்த பைக்குகள் வியாழக்கிழமை காலையில் தீப்பற்றி எரிந்து கருகியிருந்தன.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். ரியாஸ் அகமது வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இளைஞா்ஒருவா் பைக்குகளுக்கு தீ வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com