ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். முன்னாள் நகரமன்ற தலைவா் அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தாா். கட்சியின் வேலூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் சு.ரவி எம்எல்ஏ கலந்துகொண்டு 120 தொழிலாளா்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதில் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் சி.ஏழுமலை மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதனிடையே, ஆற்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் 200 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வட்டாட்சியா் கே.இளஞ்செழியன் வழங்கினாா். இதில், ஆற்காடு நகராட்சி ஆணையா் அனந்தபத்மநாப சிவம், மாவட்ட செஞ்சிலுவை சங்கத் தலைவா் சரவணன் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.