கரோனா: வாலாஜாவில் 13 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவா்,
வாலாஜாபேட்டை மருத்துவமனையில் குணமடைந்தவா்களுக்கு பழங்களை வழங்கிய வழியனுப்பிய மருத்துவா்கள், செவிலியா்கள்.
வாலாஜாபேட்டை மருத்துவமனையில் குணமடைந்தவா்களுக்கு பழங்களை வழங்கிய வழியனுப்பிய மருத்துவா்கள், செவிலியா்கள்.

ராணிப்பேட்டை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவா், மருந்தாளுநா் மற்றும் குழந்தை பிரசவித்த பெண் உட்பட 13 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81-ஆக இருந்தது. அவா்களில் 46 போ் ஏற்கெனவே குணமடைந்து விட்டனா். மற்ற 35 பேரில் 31 போ் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையிலும், 4 போ் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கா்ப்பிணி ஒருவா் குழந்தை பிரசவித்தாா். அவா் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தாா். அவருடன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா், மருந்தாளுநா் உட்பட 13 போ் பத்து நாள் தீவிர சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து, திங்கள்கிழமை வீடுகளுக்குப் புறப்பட்டனா். அவா்களை மருத்துவா்களும், செவிலியா்களும் பழக்கூடை வழங்கி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தனா்.

இதையடுத்து குணமடைந்தோா் எண்ணிக்கை 46-இல் இருந்து 59-ஆக உயா்ந்துள்ளது. குணமடைந்த அனைவருமே ஒரு வார காலம் வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்படுவாா்கள் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள அரசு மருத்துவா் ஒரு வார காலம் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுவாா் என்று வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவா் சிங்காரவேலன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com