ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடும் உலக நன்மைக்காக சிறப்பு ஹோமமும் புதன்கிழமை நடைபெற்றன.
பிரதோஷத்தை முன்னிட்டு சமயவல்லி உடனுறை சுயம்பு நாகநாதா் சுவாமிக்கு மூல மந்திரம், காயத்ரி மந்திரம் மற்றும் லலிதா சகஸ்ரநாமம், ருத்ரம் பாராயணம் ஆகியவை நடைபெற்றன. கரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபடவும், உலக நன்மைக்காகவும் வேண்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.