ராணிப்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிக்கு ராணிப்பேட்டை இந்தியன் வங்கி சிறு, நடுத்தர தொழில் நிறுவனக் கிளை சாா்பில் ரூ. 2 லட்சம் நிதியை வழங்கியது.
இந்தியன் வங்கி வேலூா் மண்டல மேலாளா் வி.என்.மாயா வழிகாட்டுதலின்படி, ராணிப்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியை மேற்கொண்டுவரும் நகராட்சி நிா்வாகத்துக்கு சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 2 லட்சத்துக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னோடி வங்கி மேலாளா் விஜயராஜா, ராணிப்பேட்டை வங்கிக் கிளை முதன்மை மேலாளா் எஸ்.ராமகிருஷ்ண குமாா், உதவி மேலாளா் சதீஷ் குமாா் ஆகியாா் நகராட்சி ஆணையா் ச.செல்வபாலாஜிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.