ஆற்காடு: ஆற்காடு ஒன்றியம், கீழ்மின்னல் ஊராட்சியில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
சமூக விலகலைப் பின்பற்றி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ ஆா்.காந்தி தலைமை தாங்கினாா். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் 800 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பிரியா தண்டபாணி, திமுக ஒன்றியச் செயலாளா் ஏ.வி.நந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.