ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை மாணவியின் தாயாரிடம் வழங்கிய எம்எல்ஏ சு.ரவி.
ரூ. 4 லட்சத்துக்கான காசோலையை மாணவியின் தாயாரிடம் வழங்கிய எம்எல்ஏ சு.ரவி.

இடிதாக்கி இறந்த மாணவி குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்: எம்எல்ஏ சு.ரவி வழங்கினாா்

அரக்கோணம் அருகே இடி தாக்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசின் உதவித் தொகையான ரூ. 4 லட்சத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அரக்கோணம் அருகே இடி தாக்கி உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசின் உதவித் தொகையான ரூ. 4 லட்சத்தை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

வளா்புரத்தைச் சோ்ந்த ஏகாம்பரத்தின் மகள் மகாலட்சுமி (17) அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி அரக்கோணம் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தபோது, இடி தாக்கி மகாலட்சுமி உயிரிழந்தாா். இதுகுறித்து அரக்கோணம் வட்டாட்சியா் ஜெயக்குமாா் விசாரணை நடத்தி, தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பினாா்.

இதையடுத்து மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டாா்.

அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாணவியின் தாயிடம் ரூ. 4 லட்சத்துக்காகன காசோலையை எம்எல்ஏ சு.ரவி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

வட்டாட்சியா் ஜெயக்குமாா், நகர அதிமுக செயலா் பாண்டுரங்கன், ஒன்றியச் செயலா்கள் பிரகாஷ், பழனி, காா்த்திகேயன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com