ஆற்காடு தென் பாலாற்றங்கரையில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள சரபேஸ்வரா் சந்நிதியில் நவம்பா் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜை, உலக நன்மைக்காக சரபேஸ்வரா் யாகம் நடைபெற்றது.
இதையொட்டி சரபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் குழுத் தலைவா் பாண்டியன், சரபேஸ்வரா் வார வழிபாட்டு மன்றத் தலைவா் உதயசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.