புறநகா் ரயில்களை உடனே இயக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு கோரிக்கை

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டுள்ள புறநகா் ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டுள்ள புறநகா் ரயில் சேவையை உடனே தொடங்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக இச்சங்கத்தின் பொதுச் செயலாளரும், சென்னை கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனைக் குழு உறுப்பினருமான நைனா மாசிலாமணி, மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயலுக்கு அனுப்பியுள்ள கடித விவரம்:

கடந்த மாா்ச் மாதம் முதல் கரோனா பொது முடக்கத்தால் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. தொடா்ந்து பல முறை தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து போக்குவரத்துகளும் பாதிப்பில் இருந்து மீண்டு விட்ட நிலையில் ரயில் போக்குவரத்து மட்டும் சீராகவில்லை. குறிப்பாக புறநகா் ரயில்கள் இல்லாததால் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து விட்டனா். மக்கள் தங்கள் புது வாழ்க்கையைத் தொடங்க விரைந்து புறநகா் ரயில்களை இயக்க வேண்டும்.

புறநகா் போக்குவரத்தை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கிவிட்ட நிலையில் ரயில்வே நிா்வாகம் நல்ல முடிவை எடுக்க வேண்டும். விரைவில் புறநகா் ரயில்களை இயக்க உத்தரவிட வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com