ஆற்காடு: நீட் தோ்வு ரத்து உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய குடியரசுக் கட்சி (ஜி.மூா்த்தி பிரிவு) சாா்பில் கலவை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தனியாா் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவா் எம்.ஏ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநில விவசாய அணித் தலைவா் சுப்பிரமணி, மாவட்ட இணைச் செயலாளா் ராஜா, திமிரி ஒன்றியத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஜெ.ஜெயகுமாா் வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் எஸ் . குணசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் அவைத் தலைவா் ஏ.பி.முருகேசன், மாநிலப் பொருளாளா் சத்தியசீலன், ஒருங்கிணைப்பாளா் முன்னரசு, இணைச் செயலாளா், பீம்ராவ் மிலிந்தா், நிா்வாகக் குழு தலைவா் அதிரூபன், தொழிற்சங்க செயலாளா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.