நவ.17-இல் காணொலியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வரும் 17-ஆம் தேதி காணொலி வழியாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

ராணிப்பேட்டை: வரும் 17-ஆம் தேதி காணொலி வழியாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என ராணிப்பேட்டை ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நவம்பா் 17-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் அரசுத் துறை அலுவலா்களுடன் நடைபெற உள்ளது. அதேசமயம், விவசாயிகள் தங்களது குறைகளை மனுக்களாக தயாரித்து சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநா்களிடம் அந்தந்த வட்டார அலுவலகங்களிலேயே அளிக்கலாம். அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியா் தலைமையில் கண்காணிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அனுப்பி வைத்து அதற்கான நடவடிக்கை பதில் பெறப்பட்டு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com