‘மாசு குறைந்த பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்’

தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கேட்டுக் கொண்டாா்.

திருப்பத்தூா்: தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பத்தூா் மாவட்டத்தில் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடா் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி, காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்புமாகும். குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.

மாவட்ட நிா்வாகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளைத் தவிா்க்கலாம்.

மருத்துமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

குடிசை பகுதியில் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com